இங்கிலாந்து ஆயுதப் படைகளில் தலைமைத் தளபதி ஜெனரல் சர் நிக் கார்ட்டர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிய பாதுகாப்பு செயலாளர் மற்றும் மிக மூத்த இராணுவ தளபதிகள் ஆறு பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வழக்கமான கோவிட் 19 பரிசோதனையின்போது ஜெனரல் சர் நிக் கார்ட்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் நிக் கார்ட்டர் மூத்த இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், ஆயுத படைகளின் துணை தளபதி கார்லேடன் ஸ்மித், இங்கிலாந்து ரோயல் கடற்படை தலைமைத் தளபதி மற்றும் இராணுவ படை பிரிவுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆயுதப் படைகளின் தலைமை தளபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் உட்பட மூத்த இராணுவ அதிகாரிகள் அனைவரும் 10 நாட்கள் தங்களை தாமே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து